20. Dezember 2005

நீ வேண்டும்...!




நீ வேண்டும்...!



என் மனதை புரிந்து நடக்கும்..
மன்மதனாக ..

என் குறும்புகளை ரசிக்கும்
ரசிகனாக ..

என்னைக் கண்ணிமை போல் காக்கும்
காவலனாக..

என் நினைவுகளுடன் இருக்கும்
காதலனாக ..

என் சின்னச் சின்ன ஆசைகளையும்
நிறைவேற்றுபவனாக ..

என்னைச் சோகங்கள் சுட்டெரிக்கும் போதும்
தேற்றுபவனாக..

என்னுடன் அன்பு சண்டை போடும்
அன்பானவனாக ..

என்னுடன் இனிமையாக பேசும்
இனிமையானவனாக ..

என்னுடன் சேர்ந்து ஊர் சுற்றும்
தோழனாக ..

என் மனதை மேகமாய் வந்து
சூழ்ந்தவனே..

என்னுடன் என்றும்.. நீ வேண்டும்
நிரந்தரமாக ...!

Keine Kommentare: