19. Dezember 2005

என் அன்புத் தெய்வம்






என் அன்புத் தெய்வம்

அம்மா என் அம்மா..
அன்பாய் அரவணைத்து..
ஆசை முத்தம் தந்து..
ஆராரிரோ பாடல் பாடி
என்னை தூங்க வைப்பாள் என் அம்மா..!

காலையில் நான் தூக்கத்தில் இருக்க..
என் பக்கத்தில் வந்து..
என் தலையை வருடியபடி..
என் நெற்றியில் முத்தமிட்டு..
காலை வணக்கம் சொல்லி ..
சிரிப்புடன் அரவணைப்பாள் என் அம்மா...!

படிப்பும் சொல்லித்தந்து ..
பாடல்களையும் படித்து காட்டி
தமிழ் பண்பாடுகளையும் சொல்லித் தந்து
நன்றாக படிக்க சொல்லி
உற்சாகமும் தருகிறாள் என் அம்மா...!

நான் கோபத்தில் சாப்பிடாமல் இருந்தால்
என்னிடம் எதோ சொல்லி
என்னை சமாதான படுத்தி..
எனக்கு சாப்பாடும் ஊட்டி விடுவாள் என் அம்மா...!

எனக்கு ஒரு சின்ன காயமென்றாலும்..
பட படர்த்த இதயத்துடன்
துடி துடித்த பார்வையுடன்
என் காயத்துக்கும் மருந்து போடுவாள் என் அம்மா...!

என் அம்மா நீ அம்மா..
என் அன்புத் தெய்வம் நீதானம்மா.. !

Keine Kommentare: