29. Mai 2006
என் தோழி...!
தோல்வி எனைத் தொடும் முன்னே
தோழமையுடன் தோழ் கொடுப்பாயடி.
கவலைகள், மனதை காயப்படுத்தும் முன்னே
காயத்தை ஆற்றும், மருந்தாக, வருவாயடி..!
ஒரு நாள் பேசாவிட்டால்
ஒரு ஜென்மம் போனதடி – என
நீ துடிப்பதை நான் நன்கு அறிவேனடி!
நினைவினில் நிஜமானவளே - என்
கனவிலும் கரைந்தாயடி..
என் தோழி என்ற உரிமையுடனே
உன் தோழில் சாய்வேனடி..
உன் சிநேகிதி என்ற உரிமையுடனே
உனை நான் அதிகாரமும் செய்வேனடி!
என் ஒற்றை விழியாக
என் தோழி ,- நீ
என்னில்,
என்றுமே வாழ்வாயாடி.. !
25. Februar 2006
இதயமே என் இதயமே
என்னைக் கேளாமலே..
என்னவனின் நினைவுகளை..
நிரப்பிவிட்டாய்..
என் இதயச் சுவர் எங்கும்...!
உன்னைக் கேளாமலே..
என்னவனையே..
பூட்டி வைத்துவிட்டேன்..
உனக்குள்...!
உன்னை..
கலங்க வைப்பதும்,காயப்படுத்துவதும்..
சிதற வைப்பதும்,சிரிக்கவைப்பதும்...
நானல்ல ..என்னவனே தான்..!
இதயமே...
அது எனக்கு புரிகிறது..
உனக்கு புரிகிறதா..
புரிந்தால் என்னை மன்னிப்பாயா
இல்லை சிந்திப்பாயா....
Abonnieren
Posts (Atom)