29. Mai 2006

என் தோழி...!


தோல்வி எனைத் தொடும் முன்னே
தோழமையுடன் தோழ் கொடுப்பாயடி.
கவலைகள், மனதை காயப்படுத்தும் முன்னே
காயத்தை ஆற்றும், மருந்தாக, வருவாயடி..!

ஒரு நாள் பேசாவிட்டால்
ஒரு ஜென்மம் போனதடி – என
நீ துடிப்பதை நான் நன்கு அறிவேனடி!
நினைவினில் நிஜமானவளே - என்
கனவிலும் கரைந்தாயடி..

என் தோழி என்ற உரிமையுடனே
உன் தோழில் சாய்வேனடி..
உன் சிநேகிதி என்ற உரிமையுடனே
உனை நான் அதிகாரமும் செய்வேனடி!

என் ஒற்றை விழியாக
என் தோழி ,- நீ
என்னில்,
என்றுமே வாழ்வாயாடி.. !

2 Kommentare:

Unknown hat gesagt…

தோழி பற்றி நன்றாக சொன்னீர்கள்

aaradhana hat gesagt…

UNGA PATHIVU AARUMAI
https://www.youtube.com/edit?o=U&video_id=GURwejFPKIQ