25. Februar 2006

இதயமே என் இதயமே




என்னைக் கேளாமலே..
என்னவனின் நினைவுகளை..
நிரப்பிவிட்டாய்..
என் இதயச் சுவர் எங்கும்...!

உன்னைக் கேளாமலே..
என்னவனையே..
பூட்டி வைத்துவிட்டேன்..
உனக்குள்...!

உன்னை..
கலங்க வைப்பதும்,காயப்படுத்துவதும்..
சிதற வைப்பதும்,சிரிக்கவைப்பதும்...
நானல்ல ..என்னவனே தான்..!

இதயமே...
அது எனக்கு புரிகிறது..
உனக்கு புரிகிறதா..
புரிந்தால் என்னை மன்னிப்பாயா
இல்லை சிந்திப்பாயா....

3 Kommentare:

Gnaniyar @ நிலவு நண்பன் hat gesagt…

anitha,

unge pulampalai unge "ennavan" kitteya solliyirukkalame :)

Gnaniyar @ நிலவு நண்பன் hat gesagt…

இதயத்திடம் கேட்கிறதை உங்க என்னவன்கிட்டேயே கேட்டிருக்கலாமே அனிதா..

Chellamuthu Kuppusamy hat gesagt…

எளிய கவிதை.
உன்னவனின் இதயத்திலும் இப்படி ஒரு போராட்டம் இருக்கிறதா?
தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.
- குப்புசாமி செல்லமுத்து